நன்கு தலை முடி வளர என்ன செய்யலாம்....
- 8வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை காட்டுவது நல்லது. இதனால் மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும் அழுக்கும் வெளியேறி,முடிக்கு வேண்டிய பலம் கிடைக்கும்.
- வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக சீவி முடிந்து வைக்க வேண்டும். அணியும் ஆடைக்கு ஏற்ப "ஸ்கார்ப்" அல்லது தொப்பி அணிவது கூந்தலின் பாதுகாப்பிற்கு மேலும் நல்லது.
- பணி செய்யும் இடத்தில் ஏற்படக்கூடிய_தூசி, துகள்கள், காற்று மாசு, போன்றவை ஏற்படின்.. தலைக்கு பயன்படுத்தக்கூடிய_ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே, ஹேர் ஆயில், போன்றவை தவிர்ப்பது நல்லது. அல்லது அவைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
- அடிக்கடி வெயிலில் செல்லக்கூடியவர்கள் கூந்தலில் ஹேர் சன் ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன்படுத்துவது நல்ல பலன் அளிக்கும்.
- முடிகள் நனைந்திருந்தாலும் அதிக எண்ணெய் தன்மையுடன் இருந்தாலும், முடிகளில் அழுக்கு படிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு- நினைவில் கொள்க.
- சுற்றுப்புற சூழல் மாசுபாட்டினால் முடி உலர்ந்து விடும். அப்போது வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதும் நல்லது.
- தலை முடிக்கு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. அதோடு
- கூடுமானவரை நமது இயற்கை பாரம்பரியபடி.. சீயக்காய், காய்ந்த எலுமிச்சம்பழ தொலி, வெந்தயம், பூந்திக்கொட்டை, பாசிப்பருப்புமாவு, கடலை மாவு, போன்றவை பயன்படுத்தவதே மிக பாதுகாப்பானது. முடி வளர்வதற்கு நன்றும் கூட.....
Comments
Post a Comment